News September 7, 2025
சிவகங்கையில் இனி Whatsapp மூலம் தீர்வு

சிவகங்கை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
Similar News
News September 8, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இதுவரை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் புறப்பட்ட ரயில் எண் 16751 தினசரி போட் மெயில் ரயில்
செப்.11 முதல் நவ.10 வரை தாம்பரத்தில் இருந்து மாலை 7:42 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News September 8, 2025
காரைக்குடி காவல் நிலையத்தில் ரகளை

காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவலர்கள் மனுக்களை விசாரித்தனர். அதில் குடும்ப பிரச்சினை தொடர்பாக வந்திருந்த 2 தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதை ஆய்வாளர் செல்வி, பெண் காவலர்கள் தடுக்க முயன்றனர். ஆனால், இரு தரப்பினரும் கீழே தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆய்வாளர் செல்வி அளித்த புகாரின்பேரில், இரு தரப்பிலும்13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News September 8, 2025
திருப்புவனம்: இடி தாக்கியதில் பெண் உரிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரைச் சோ்ந்தவா் சிவகாமி அம்மாள்(50). இவா், நேற்று மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் அந்தப் பகுதியிலுள்ள சமையன் கோயில் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை அவிழ்ப்பதற்காகச் சென்றாா். அப்போது, இடி தாக்கியதில் சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.