News March 31, 2025
சிவகங்கையில் அச்சத்தில் போலீஸ் குடும்பத்தினர்

சிவகங்கை வாராச்சந்தை அருகே நகரம் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் குடியிருப்பு வளாகத்தில் 8 அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளது. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்புகள் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இக்கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி கூரைகள் பெயர்ந்து விழுகின்றன. அடிக்கடி கான்கிரீட் சிமின்ட் காரைகள் பெயர்ந்து விழுவதால் போலீஸ் குடும்பத்தினர் அச்சத்தில் தவிக்கின்றனர்.
Similar News
News January 25, 2026
சிவகங்கை: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
சிவகங்கை: NO EXAM.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News January 25, 2026
சிவகங்கை: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் அவரது தாயார் வீட்டிற்கு சென்ற போது வீட்டிலிருந்து ரூ.20,000 திருடு போனது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அதே பகுதியை சேர்ந்த அங்கையர்கரசி, ராகுல், அருண், பார்வதி உள்ளிட்ட 5 பேர் சங்கீதாவை அவதூறாக பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் விசாரணை.


