News April 13, 2025
சிவகங்கை:குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

காரைக்குடியை சேர்ந்தவர் லிங்கம். அவரது மனைவி பானுமதி மகள் விஷாலினி 9 சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சிறுமியை வளர்ப்பதில் சிரமம் என நினைத்த தம்பதியினர் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு, மகளுக்கும் கொடுத்தனர்.பின் உறவினருக்கு விஷம் அருந்தியதை தெரிவித்தனர். உறவினர்கள், மூவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சிறுமி பலியானார். லிங்கம், அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Similar News
News April 14, 2025
தமிழ் புத்தாண்டு – சித்தர்களின் அருள் வாக்கு

“விசுவாவசு”என்பது தமிழ் புத்தாண்டு ஆண்டின் பெயர்களில் ஒரு பெயராகும். இது தமிழ் புத்தாண்டு வருடங்களில் அறுபது பெயர்களில் 39வது பெயராகவும், சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்ற ஆண்டாகவும், சுபமான ஆண்டாகவும், கருதப்படுகிறது. இந்த ஆண்டில் சிவ வழிபாட்டையும், சூரிய வழிபாட்டையும் மக்கள் தினமும் செய்வது சிறப்பாக இருக்கும் என்பது சித்தர்களின் அருள்வாக்கு.
News April 14, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஒரு வாய்ப்பு

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக கோவை விரைவு ரயில் வ.எண்(16322) வருகின்ற ஏப்ரல் 25, 26, 28, 29′ 30 ஆகிய 5 நாட்களுக்கு வழக்கமாக நாகர்கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் செல்லாது. மாறாக காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் எனவே சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் 5 நாளைக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News April 14, 2025
சிவகங்கை: விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*