News October 19, 2025

சிவகங்கை:ஊசி போடும் போது ஏற்பட்ட தவறில் பறிபோன உயிர்

image

தேவகோட்டை, டாக்டர் ஏழுமலை ஆஸ்பத்திரியில் கடந்த ஜனவரி மாதம் செல்வி என்பவர் உடல்நிலை சரியில்லை என செவிலியர் ஊசி போடும் பொழுது மயங்கி விழுந்தார்.உடனடியாக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இது பற்றி சிவகங்கை மாவட்ட மருத்துவத்துறை விசாரித்து அதன் அறிக்கைபடி ஊசி மருந்தில் தவறு நடந்ததால், ஏழுமலை மற்றும், டாக்டர் ஹாரிஸ் குமார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 8, 2026

சிவகங்கை: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு <>CLICK <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

News April 8, 2026

சிவகங்கை: பெண்ணிடம் ஆசை காட்டி மோசடி.!

image

தேவகோட்டை அண்ணாநகரை சேர்ந்த 37 வயது பெண்ணிடம் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அலைபேசியில் பேசியுள்ளனர். அதில் கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதை நம்பிய அப்பெண் அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.89 ஆயிரத்து 125-ஐ செலுத்தியுள்ளார். பின்னர் கடன் கிடைக்காததால், மோசடியை அறிந்து சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News April 8, 2026

காரைக்குடி: காவல் நிலையத்தில் கைவரிசை காட்டிய கும்பல்.!

image

காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் மணல் கடத்தியதாக வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அந்த லாரி திடீரென மாயமானது. இதுகுறித்து எஸ்.ஐ கார்த்திகேயன் புகார் அளித்த நிலையில், காவல் நிலையத்தில் நின்றிருந்த லாரியை கடத்தியதாக கணேசபுரம் செந்தில்குமார் (வயது 44), மணிகண்டன் (வயது 48), கார்த்திக் (வயது 42) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!