News October 31, 2025
சிலிண்டர் வாடிக்கையாளர்களே உஷார்! இன்றே கடைசி…

நாடு முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்ட LPG இணைப்புகள் உள்ளன. இதில், 10 கோடி பேர் PMUY திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் வாங்குகின்றனர். இந்நிலையில், அனைத்து விதமான பயனாளிகளும் அக்.31-க்குள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் E-KYC-ஐ முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் நவம்பர் மாதத்தில் இருந்து மானிய தொகை டெபாசிட் செய்யப்படாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

ராஜராஜசோழனின் சதய விழாவையொட்டி தஞ்சையில் நாளை உள்ளூர் விடுமுறை என்பதால் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது. மழை விடுமுறையை ஈடுகட்ட சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அங்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் முழுநேரம் செயல்படும். சனிக்கிழமை என்பதால், பிற மாவட்டங்களில் இயல்பாகவே அரசு பள்ளிகளுக்கு விடுமுறையே!
News October 31, 2025
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க செம்ம TIPS!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் உங்கள் அழகை மறைக்கிறதா? கவலை வேண்டாம். இதற்கு அருமையான Tip ஒன்று இருக்கிறது. வெள்ளரிக்காயையும், கேரட்டையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள் முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறவிடுங்கள் காய்ந்த பின் சோப்புக்கு பதிலாக கடலை மாவு கொண்டு கழுவுங்கள் வாரத்திற்கு 2 முறை செய்து வர முகத்தில் உள்ள புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும். SHARE THIS.
News October 31, 2025
செங்கோட்டையன் அடுத்து என்ன செய்வார்?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பின்வரும் 4-ல் ஏதாவதொரு முடிவை செங்கோட்டையன் எடுக்கக் கூடும்: 1)OPS, சசி, டிடிவி ஆகியோருடன் இணைந்து புதிய அணியை உருவாக்கலாம். 2) பாஜக (அ) வேறு கட்சியில் இணையலாம்: ஏற்கெனவே அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், இதற்கு வாய்ப்புள்ளது 3) புதிய கட்சி தொடங்கலாம்: நடைமுறையில் வெற்றிபெறுவது கடினம். 4) EPS உடன் சமாதானம் – இதை செய்தால் முதலுக்கே மோசமாகும். உங்க கணிப்பு?


