News March 13, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி பயப்படாதீங்க: பிரேமலதா

image

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு பிரச்னையை திறம்பட கையாள முடியும் என PM மோடி கூறியதை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தேவையின்றி பதட்டம் அடைய வேண்டாம் என தெரிவித்தார். அதுபோல, அனைவருக்கும் தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Similar News

News April 5, 2026

BREAKING: திமுகவில் இருந்து MLA விலகுகிறார்

image

ஒட்டப்பிடாரம் திமுக MLA சண்முகையா தவெகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான ராமஜெயம் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால், ஸ்டாலின் நிகழ்ச்சியை நேற்று புறக்கணித்த சண்முகையா வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதிருப்தியால் திமுகவிலிருந்து <<19563851>>அடுத்தடுத்து பலர்<<>> விலகி வருகின்றனர்.

News April 5, 2026

திருமாவுக்கு திமுக அழுத்தம்: EPS

image

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிடப் போவதில்லை என நேற்று திருமாவளவன் அறிவித்திருந்தார். இந்நிலையில், திமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே திருமா போட்டியிடாமல் பின்வாங்கிவிட்டார் என்று EPS விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியவில்லை என சாடிய அவர், அடிமையாகவே கூட்டணி கட்சிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

News April 5, 2026

கேஸ் தட்டுப்பாடு.. மாதம் ₹25,000 இழப்பீடு: விக்கிரமராஜா

image

சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் மூடப்​பட்ட கடைகளுக்கு அரசு மாதம் ₹25,000 இழப்​பீடு வழங்க வேண்​டும் என விக்​கிரம​ராஜா வலி​யுறுத்​தி​யுள்​ளார். போர்க்​கால அடிப்​படை​யில் சிலிண்​டர் தட்​டுப்​பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றும் கூறியுள்ளார். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்​டால் ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகள் மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!