News July 24, 2024

சிறையில் செல்போன் நெட்வொர்க் சிக்னல் சோதனை

image

காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் செல்போன் சிக்னல் கிடைக்காததை உறுதி செய்யும் வகையில் அனைத்து செல்போன் நெட்வொர்க் நிறுவனத்தினருடன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சிக்னல் சோதனை சிறைச்சாலையில் இன்று நடைபெற்றது.
சிறையில் ஜாமர் கருவி இருந்தும் எப்படி சிக்னல் கிடைக்கிறது? அலைவரிசையை அதிகப்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு சிறைத்துறை எச்சரிக்கை.

Similar News

News March 10, 2026

புதுவை: என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

காரைக்கால் வடக்கு தொகுதி கீழகாசாக்குடி, காளியம்மன் கோவில் தெரு, காலனி தெரு, வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவைச் சார்ந்த இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் அமைச்சர் திருமுருகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

News March 10, 2026

புதுவை: ரயிலில் கடத்த முயன்ற மது பாட்டில்கள்!

image

புதுவையில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயிலில் நேற்று மதியம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரத்குமார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 பைகள் மட்டும் தனியாக இருந்துள்ளது. அந்த பைகளை சோதனை செய்தபோது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 10, 2026

புதுவை: பெண் காவலர் மீது தாக்குதல்!

image

பெரியகடை காவல் நிலைய காவலர் ஜெய்சூர்யா. இவர் புதுவை கடற்கரை பாதுகாப்பு பணிக்கு சென்றபோது நேரு சிலை அருகே கடைக்காரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த ஜெயசூர்யாவை அங்கு கடை நடத்திவந்த சோலை நகர் மணி, அவரது மனைவி சந்தியா மற்றும் குப்பு ஆகியோர் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியகடை போலீசார் மணி, சந்தியா, குப்பு ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!