News November 15, 2024
சிறு தானிய உணவு தயாரிக்கும் பயிற்சி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், தனியார் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து சிறு தானிய உணவு தயாரிக்கும் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் ஒரு மாதம் இந்த பயிற்சி நடைபெறுகிறது. அதன்படி நரிக்குடியில் இன்றைய உணவாக கீரை பூரி உள்ளிட்ட பல்வேறு சிறு தானிய உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.
Similar News
News March 2, 2026
சிவகாசி: கருந்திரி தயாரித்த 7 பேர் மீது வழக்கு

வெம்பக்கோட்டை அருகே பனையடிப்பட்டியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக தகர செட்டில் பட்டாசு கருந்திரி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக தயார் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான கருந்திரிகள், 270 குரோஸ்களையும் பறிமுதல் செய்து கீழக்காந்தி நகரை சேர்ந்த மாரிமுத்துவை(32) கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர்.
News March 2, 2026
விருதுநகரில் +2 பொதுத்தேர்வு எழுதும் 22123 மாணவர்கள்

தமிழகம் முழுவதும் இன்று +2 பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 218 பள்ளிகளிலிருந்து 9855 மாணவர்கள், 11, 715 மாணவிகள் மற்றும் தனி தேர்வர்கள் 553 பேர் என மொத்தம் 22123 பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்காக 99 தேர்வு மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 99 தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
News March 1, 2026
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

வீரசோழனை சேர்ந்த சிவகாமி நரிக்குடி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது 2016-ம் ஆண்டு வீட்டிற்கு செல்லும்போது அரசு பஸ் மோதியதில் காயமடைந்தார். இழப்பீடு கோரி ஸ்ரீவி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் ரூ.30.68 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.


