News April 26, 2024

சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை!

image

பெரம்பலூர் கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் நேற்று(ஏப்.25) பைக் ஓட்டிச் சென்று விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து மோட்டார் வாகனச் சட்டம் 1988 – 199A பிரிவு படி, 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்கள் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இது போன்று அலட்சியமாக உள்ள பெற்றோர், பாதுகாவலர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25,000 அபதாரம் விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News August 22, 2025

பெரம்பலூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள்<> இங்கே <<>>கிளிக் செய்து, வரும் செப்.4-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920/- வரை வழங்கப்படும். மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News August 22, 2025

பெரம்பலூர்: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

image

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 22, 2025

பெரம்பலூரில் இன்று சிறப்பு முகாம் – கலெக்டர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஏதுவாக ‘உயர்வுக்கு படி’ முகாம் இன்று பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் உயிர்கல்வியில் சேரவும், எளிதாக கல்வி கடன் வழி வகை செய்து தரப்படும். எனவே இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு பெரம்பலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!