News October 24, 2025
சிறுமையை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

கடலூர், ஸ்ரீமுஷ்னத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் தனிமையில் இருந்தாக கூறப்ப்டுகிறது. இந்நிலையில், சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 25, 2025
கடலூர்: வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

விருத்தாசலம் வட்டம் கு.நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (40), என்பவர் வீட்டில் 3 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது, சுரேஷின் உடல் அழுகிய நிலையில் நேற்று (அக்.24) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 25, 2025
கடலூர்: ஆசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம்

விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் என்பவரது மகள் ராதிகா (35). ஆலடி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த ராதிகா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரை காதலித்து ஏமாற்றிவிட்டு தற்கொலைக்கு தூண்டியதாக மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நேற்று பள்ளி தாளாளர் மகனான பிரின்ஸ் நவீன் (37) என்பவரை கைது செய்தனர்.
News October 25, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.24) இரவு 10 மணி முதல் இன்று (அக்.25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.


