News January 24, 2026
சிறுமுகை அருகே கோர விபத்து: ஒருவர் பலி

சிறுமுகை உளியூர் பகுதியைச் சேர்ந்த பாரதி, ராமசாமி மற்றும் சக்திவேல் ஆகிய மூவர் ஒரே பைக்கில் விஎன்கே தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதில், பாரதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 3, 2026
BREAKING: ஆனைமலை அருகே கத்திகுத்து

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா இன்று நடைபெற்று வருகிறது. குண்டம் இறங்கும் இடத்தின் அருகே இளநீர் வியாபாரம் செய்யும் இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக ராஜன் என்பவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 3, 2026
கோவையில் அண்ணாமலை பேட்டி

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தனது தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனிப்பதே முதல் கடமை என தெரிவித்தார். இதனால் 6 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துவிட்டதாகவும், தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்றும் அறிவித்தார்.
News February 3, 2026
BREAKING: காரமடையில் யானை தாக்கி ஒருவர் பலி

காரமடை அடுத்துள்ள பில்லூர் அணையை சுற்றிலும் ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் நள்ளிரவு பரளிக்காடு கிராமத்தில் ஒற்றை காட்டு யானை உலா வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் யானையை விரட்ட முற்பட்டுள்ளனர். அப்போது, ஆக்ரோஷமான யானை தாக்கியதில் சிவக்குமார்(45) என்ற பழங்குடியின இளைஞர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


