News August 26, 2025

சிறுமி பாலியல் வழக்கு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

image

துரைப்பாக்கத்தில் 2015-ஆம் ஆண்டு, 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (29) என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3,000 ரூபாய் அபராதமும் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி நசீமா பானு இத்தீர்ப்பை நேற்று வழங்கினார்.

Similar News

News August 26, 2025

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டில் வரும் ஆக.30ஆம் தேதி சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் முகாமில் 8th, பட்டப்படிப்பு மற்றும் BE, ITI, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 044-27426020, 9384499848 எண்களில் அழைக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

செங்கல்பட்டு: பஸ்ல போறவங்க கவனத்திற்கு

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

விநாயகர் சதுர்த்தி ரயில்வே அட்டவணையில் மாற்றம்

image

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு(செப்டம்பர் 27), சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று தேசிய விடுமுறை தினம் என்பதால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பயணிகள் நலனுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!