News March 7, 2026

சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ வழக்கு

image

விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன்(28). இவர் 16 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு சிதம்பரம்அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி நல்லூர் ஊர்நல அலுவலர் மணிமேகலைவிருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அருள்முருகன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News April 3, 2026

அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியீடு

image

அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளிட்டுள்ளார். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற ஏப்.7ம் தேதி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி உள்ளிட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் என தெரிவித்துள்ளார்.

News April 3, 2026

பொது பார்வையாளர் மாற்றம் – ஆட்சியர் தகவல்

image

புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்கனவே பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த கார்த்திகே தான்ஜீ இந்திய தேர்தல் ஆணையத்தால் மாறுதல் செய்யப்பட்டு, தற்போது அசிதா மிஸ்ரா பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என, மாவட்ட ஆட்சியர் சிபி ஆயத்த செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News April 3, 2026

கடலூர்: வீடு வீடாக தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கல்

image

மகளிர் திட்டம்- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கடந்த தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவு பதிவான 79 மற்றும் 82-வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நேற்று நூதன விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில், வீடு வீடாகச் சென்று மேள தாளங்கள் முழங்க தேர்தல் திருவிழா அழைப்பிதழை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!