News April 16, 2025
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்

கடந்த 2018 மார்ச் 5ம் தேதி தாம்பரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி விளையாடி கொண்டிருக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். மேலும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
Similar News
News April 16, 2025
சென்னையில் அரசு வேலை; 12th பாஸ் போதும்

சென்னையில், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் காலியாக உள்ள 36 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th, டிப்ளமோ முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.19,500 – ரூ .71,900 சம்பளம் வழங்கப்படும். குறிப்பாக இந்த பணிக்கு எந்த வயது வரம்பும் கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <
News April 16, 2025
நடக்காத விதிமீறல்; வாகனங்களுக்கு அபராதம்

சென்னையில் சாலை விதிகளை முறையாக பின்பற்றி வாகனம் ஓட்டுவோருக்கும், விதிமீறலில் ஈடுபட்டதாக மொபைல் போன் எண்ணிற்கு அபராத ரசீது வருவது, ஓட்டுநர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமீபத்தில், இத்தகைய மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும், இத்தகைய குளறுபடி இருந்தால், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். SHARE IT.
News April 15, 2025
தொழில் பிரச்னைகளை தீர்க்கும் நிமிஷாம்பாள்

சென்னை சௌகார்பேட்டை காசி செட்டி தெருவில், பலருக்கும் தெரியாத அன்னை நிமிஷாம்பாள் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் நிமிஷாம்பாளுக்கு இங்கு மட்டும் தான் கோவில் உள்ளது. இங்கு சென்று வழிப்பட்டால் தொழில் சார்ந்த பிரச்னைகள் நீங்கி, நஷ்டத்திலிருந்து மீண்டு வியாபாரம் லாபகரமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொழில், வியாபாரத்தில் சிரமப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.