News April 8, 2025
சிறுமியை பாலியல் கொடுமை செய்தவருக்கு வாழ்நாள் தண்டனை

சிவகங்கை மாவட்டம், பள்ளத்துரை அடுத்துள்ள கொத்தரி கிராமத்தைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் சிறுமி கர்ப்பமானார். காரைக்குடி மகளிா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, இந்த விசாரணையானது சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், பழனிச்சாமிக்கு நேற்று (07) வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்தார்.
Similar News
News April 16, 2025
சிவகங்கையில் ரூ.45 ஆயிரத்தில் அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
News April 16, 2025
சிவகங்கை: கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சிவகங்கை மக்களே கொளுத்தும் கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காபி, டீ அடிக்கடி குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். ‘பாஸ்ட் புட்’ உணவுகளை தவிர்க்க வேண்டும். கோதுமை,மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவையெல்லாம் உடல் வெப்பத்தை உண்டாக்கி உடலுக்கு கேடு விளைவிக்கும். *SHARE !!
News April 16, 2025
மாணவர்களுக்கான ஒரு நாள் விஞ்ஞானி நிகழ்ச்சி

காரைக்குடி ‘சிக்ரியில்’ மாணவர்களுக்கான ஒரு நாள் விஞ்ஞானி நிகழ்ச்சி மே 13 முதல் 17 வரை நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ‛https://jigyasa-csir.in/ என்ற இணையதளத்தில் ஏப். 28 முதல் மே 2 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் மட்டுமே காரைக்குடியில் ‘சிக்ரியில்’ பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.