News July 25, 2024

சிறுமியிடம் அத்துமீறல்; தொழிலாளி கைது

image

வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சாமிவேல் (58). நேற்று அந்த பகுதியை சேர்ந்த 8 வயதுடைய சிறுமியை சாமிவேல் தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். பின்னர் அவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய், வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிவேலை கைது செய்தனர்.

Similar News

News March 10, 2026

கடலூர்: திமுக மாநாட்டிற்கு சென்ற கார் கவிழ்ந்து விபத்து

image

திருச்சியில் நேற்று மாலை திமுக மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, செங்கல்பட்டிலிருந்து காரில் சென்று திரும்பி வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ராமநத்தம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தாஸ்(60), சதீஷ்(38), சுரேஷ்(38), ஜீவா(15) தனபால்(40), உமாபதி(40), ஜெயராமன்(45) 7 பேர் காயமடைந்து வேப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை.

News March 10, 2026

கடலூர்: திமுக மாநாட்டிற்கு சென்ற கார் கவிழ்ந்து விபத்து

image

திருச்சியில் நேற்று மாலை திமுக மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, செங்கல்பட்டிலிருந்து காரில் சென்று திரும்பி வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ராமநத்தம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தாஸ்(60), சதீஷ்(38), சுரேஷ்(38), ஜீவா(15) தனபால்(40), உமாபதி(40), ஜெயராமன்(45) 7 பேர் காயமடைந்து வேப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை.

News March 9, 2026

கடலூர் மாவட்டத்தில் 33,437 மாணவர்களுக்கு தேர்வு

image

கடலூர் கல்வி மாவட்டத்தில் மார்ச் 11ஆம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை 18,932 மாணவ, மாணவியர்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 12,364 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் 161 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 33,437 மாணவ,மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!