News March 27, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

image

தவளக்குப்பம் அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (42), தொழிலாளி. இவா் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தவளக்குப்பம் போலீஸாா், சுரேஷை கைது செய்தனா். அவா் மீதான வழக்கு விசாரணை, புதுவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், சுரேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தும், ரூ.10000 அபராதம் விதித்தும் நீதிபதி சுமதி உத்தரவிட்டாா்.

Similar News

News March 30, 2025

புதுவை முதலமைச்சரின் ரமலான் வாழ்த்து செய்தி

image

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில், ரமலானின் மறைபொருளானது, நோன்புடன் தீவிர பக்தியில் ஈடுபடுவதையும், மனத்தூய்மை, பொறுமை, சுய ஒழுக்கத்தைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நோன்பின் பிரார்த்தனைகள், உங்கள் வாழ்வில் அன்பு, சகோதரத்துவம், ஈகை, வலிமை மற்றும் வளமான வாழ்வைக் கொண்டுவந்து சேர்க்கட்டும். அனைவருக்கும் எனது அன்பான ரமலான் நல்வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்

News March 30, 2025

புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் ரம்ஜான் வாழ்த்து

image

புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா இன்று வெளியிட்ட செய்தியில், உலகில் வாழும் சரிபாதி மக்களின் விழாவான ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் புதுச்சேரி மாநில இஸ்லாமிய பெருமக்களுக்கு திமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்று கூறினார்.

News March 30, 2025

புதுவையில் காவலர்கள் திடீர் மாற்றம்

image

புதுவை காவல் தலைமையகத்தின் எஸ்.பி சுபம் கோஷ் வெளியிட்ட அறிவிப்பில், இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி சிக்மா நுண்ணறிவு பிரிவிற்கும், வரதராஜன் போதை பொருட்கள் தடுப்பு பிரிவிற்கும், செந்தில்குமார் சிக்மா செக்யூரிட்டி, ஆடலரசன் ஏனாம் காவல் நிலையம், அனில்குமார் மாஹே காவல் நிலையம், சப் இன்ஸ்பெக்டர்கள் குமரவேல் ஒதியஞ்சாலை, பிரபு பாகூர் காவல் நிலையத்திற்கும் என இடம் மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!