News February 18, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது

image

தஞ்சையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், சென்னையில் வேலை செய்த போது 14 வயது சிறுமிடம் பழக்கம் ஏற்பட்டது. ஜெகதீஸ்வரன் சிறுமியை, தஞ்சை வரசொல்லிய நிலையில், ஜெகதீஸ் மாயமானார். பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுமிக்கு உதவி செய்வது போல் நடித்து புவனேஷ்வரன் என்பவர் வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் வெளிவர காதலன் ஜெகதீஸ்வரன், புவனேஷ்வரனை போலீஸ் கைது செய்தனர்.

Similar News

News March 7, 2026

தஞ்சை: விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் கரும்பு அரவை நடைபெற்று வருகிறது. நடப்பு அரவைப்பருவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பரப்பிலிருந்து 1,45,000 மெ.டன்கள் அரவை செய்ய திட்டமிடப்பட்டு 4-ம் தேதி வரை 1,11,368 மெ.டன்கள் அரவை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆலை அரவை 12-ம் தேதி நிறைவு செய்ய உள்ளதால் ஆலைக்கு பதிவு செய்து, விவசாயிகள் கரும்புகளை விரைந்து அனுப்ப ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

News March 6, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.6) இரவு 10 முதல் நாளை (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 6, 2026

பொதுமக்கள் விழிப்புணர்வு முகாம் – ஆட்சியர் தகவல்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பதிவுத்துறையில் நடைமுறைப்படுத்தியுள்ள ஸ்டார் (STAR) 3.0 திட்டத்தின்‌ மூலம் ஆவணங்கள் பதிவேற்றம் செய்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு முகாம் வரும் 7-ம் தேதி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய நில ஆவணங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!