News April 22, 2025
சிறப்பு ரயில் இயக்கம்

போத்தனூர்- பரவுனி (06055) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் மே 24ந் தேதி வரை சனிக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு பரவுனி சென்றடையும். பரவுனி-போத்தனூர் (06056) வாராந்திர சிறப்பு ரெயில் பரவுனியில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
Similar News
News October 31, 2025
திருப்பூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
திருப்பூர்: ஆதாருடன் பான் கார்டை இணைக்க எளிய வழி!

திருப்பூர் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1.<
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News October 31, 2025
திருப்பூரில் நாளை மின்தடை: உங்க ஏரியா இருக்கா?

அவினாசி ,வீரபாண்டி மற்றும் ஆண்டிப்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை, திருப்பூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவினாசி செயற்பொறியாளர் பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


