News November 4, 2025

சிறப்பு தீவிர திருத்த கணக்கீடு படிவம் ஆட்சியர்

image

கூடலூர் ஊராட்சி கங்கை மோட்டூர் கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வாக்காளர்களுக்கு சிறப்பு தீவிர திருத்த கணக்கீடு படிவத்தை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (நவ.4) தேதி வழங்கினார். இதில் வாக்காளர் பதிவு அலுவலர் மீனா, வட்டாட்சியர் செல்வி மற்றும் அருள் செல்வம் உடன் இருந்தனர். வாக்காளர் விவரத்தை முழுவதுமாக பூர்த்தி செய்து தர வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News

News November 5, 2025

காவல்துறை இரவு ரோந்து விவரங்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று இரவு ரோந்து பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய விவரங்களை தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

News November 4, 2025

TNPSC குரூப் 2 மற்றும் 2A இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

image

இராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி II & llA ( group ll& llA) இட்ட முதன்மை எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நாளை (05.11.2025) தொடங்கப்பட உள்ளது. மாணவர்கள் புகைப்படம் 2 ஆதார் அட்டை நகல் 1 உடன் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

News November 4, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ -04) மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட மருத்துவ அலுவலர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!