News September 18, 2025
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அன்புமணி சுவாமி தரிசனம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற கருத்தை வலியுறுத்தி, இன்று கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிதம்பரத்திற்கு நேற்று இரவு வருகை தந்தார். இந்நிலையில் இன்று (செப்.18) காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் சுவாமி தரிசனம் செய்தார். உடன் பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளனர்.
Similar News
News November 8, 2025
கடலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் மானியம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233170>>பாகம்<<>>-2)
News November 8, 2025
கடலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

1.கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2.ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3.ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4.ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
4.விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..
News November 8, 2025
தமிழக அரசால் நூலகங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது

3 நகரங்களில் நூலகங்கள் அமைக்க டெண்டர்.
சேலம், நெல்லை மற்றும் கடலூரில் மாபெரும் நூலகங்கள் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.
சேலத்தில் பாரதிதாசன் பெயரில் ரூ.73 கோடியிலும், நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.69 கோடியிலும், கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரில் ரூ.80 கோடியிலும் நவீன வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. டெண்டர் முடிவுற்ற பிறகு தமிழக அரசால் முழு விபரமும் தெரிவிக்கப்படும்


