News April 25, 2024

சிதம்பரம் அருகே பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

image

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று(24.4.2024) இரவு லஞ்ச ஒழிப்புத்துறை சுமார் 3 மணி நேரமாக ஆய்வு செய்தனர். அதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தேவநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பணத்தை கைப்பற்றினர் தணிக்கை குழுவிற்கு லஞ்சம் கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு

Similar News

News August 16, 2025

கடலூர்: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி வேண்டுமா?

image

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற<> இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

News August 16, 2025

மங்கலம்பேட்டை: மது பாட்டில்கள் விற்றவர் கைது

image

மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையிலான போலீசார் நேற்று எம்.பட்டி கிராம பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (49) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News August 16, 2025

கடலூரில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். நிலத்தின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <>clip.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!