News May 3, 2024

சிதம்பரம் அருகே கார் மோதி தொழிலாளர் பலி

image

சிதம்பரம் அருகே வீரநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 21, 2025

கடலூர்: 10th போதும், ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். <>cpcb.nic.in/jobs.php<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். Share It

News April 21, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 41 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (ஏப்.21) கடைசி நாளாகும். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

News April 21, 2025

பண்ருட்டி அருகே கல்லூரி மாணவர் லாரி மோதி பலி

image

பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (16) புதுச்சேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று சொந்த வேலை காரணமாக திருத்துறையூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஊராட்சி அலுவலகம் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!