News July 6, 2025

சிங்கிரிகுடி: கஞ்சா விற்ற இளைஞர் கைது

image

ரெட்டிச்சாவடி போலீஸ் எஸ்.ஐ. எழிலரசி மற்றும் போலீசார் நேற்று சிங்கிரிகுடி கோயில் அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த புதுச்சேரி மாநிலம் நோனாங்குப்பம் புதுகாலனியை சேர்ந்த செல்வவிநாயகம் மகன் சந்தோஷ் (29) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Similar News

News July 6, 2025

கடலூர்: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்

image

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News July 6, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜூலை.7) முதல் தொடங்க உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வரும் 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 6, 2025

கடலூர்: ரூ.85,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட ‘1007’ காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ. 48,480-ரூ.85,920 வரை வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!