News November 21, 2024
சிங்கம்புணரி அருகே 110 கிலோ காப்பர் கம்பி திருட்டு

முட்டாக் கட்டியில் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு மின் விநியோகம் இல்லை. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், எஸ்.வி. மங்கலம் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் மின் மாற்றியை ஆய்வு செய்தபோது, அதிலிருந்து 110 கிலோ காப்பர் கம்பிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 9, 2025
சிவகங்கை: நாதக வேட்பாளர் புகார்; ஆட்சியர் விளக்கம்

சிவகங்கையில் நாதக வேட்பாளர் மற்றும் அவரது கணவர் பெயர் SIR-ல், இறந்தவர்கள் பட்டியலில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் உடனடியாக சரி செய்யப்படும் என சிவகங்கை ஆட்சியர் விளக்கம் தெரிவித்துள்ளார். Check list என்பது இப்பணியில் உள்ள குறைகளை களைவதற்காக வழங்கப்பட்ட விவரங்கள்தான். இது இறுதிப்பட்டியல் அல்ல என அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் வாக்காளர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தம்

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளைய தினம் செவ்வாய்கிழமை (9.12.2025) மற்றும் புதன்கிழமை(10.12.2025) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, இன்று தெரிவித்துள்ளார்
News December 9, 2025
சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தம்

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளைய தினம் செவ்வாய்கிழமை (9.12.2025) மற்றும் புதன்கிழமை(10.12.2025) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, இன்று தெரிவித்துள்ளார்


