News October 19, 2025
சிங்கம்புணரியில் விபத்து அபாயம்

சிங்கம்புணரி: மதுராபுரி ஊராட்சியில் கோபாலபச்சேரி வழியாக பிரான்மலை செல்லும் ராமகரண் ஊருணி அருகே கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்து சாலை கரையத் தொடங்கியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஊருணி மக்களுக்கு முக்கிய குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக செயல்படுகிறது. பெய்த மழை காரணமாக சுவர் இடிந்து, அருகேயுள்ள தார் சாலை பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
Similar News
News October 19, 2025
சிவகங்கைக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை.!

மன்னார் வளைகுடா மற்றும் அதைன ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக சிவகங்கையில் நாளை (அக்.20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 19, 2025
சிவகங்கை: தவறவிட்ட பண பையை ஒப்படைத்த போலீசார்

தேவகோட்டை டைலர் கடை வைத்திருக்கும் வள்ளி என்ற பெண்மணி தீபாவளி திருநாளுக்கு பொருட்கள் வாங்க தேவகோட்டை பஸ் நிலையம் அருகே வரும்பொழுது அவர் வைத்திருந்த கட்டப் கீழே விழுந்தது அதில் 15000 மதிப்புள்ள செல்போன் மற்றும் ரொக்க பணம் 3000 ரூபாய் இருந்தது போக்குவரத்து பணிகள் இருந்தார் காவலர்கள் யோகராஜ் மற்றும் கௌதம் இதை எடுத்து அந்த பெண்மணியை அழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.
News October 19, 2025
சிவகங்கை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

சிவகங்கை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!