News September 23, 2025
சிஎம் சிறு விளையாட்டரங்கம் பணி அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி கேதையுறம்பு ஊராட்சியில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ‘முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்’ பணிகளை உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று (செப்.23) நேரில் சென்று ஆய்வு செய்தார். நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் சரவணன் மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய செயலாளர் S.R.K.பாலு, துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளிட்டர் உடன் இருந்தனர்.
Similar News
News September 23, 2025
அதிகாரிபட்டி: சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு!

சிலுவத்தூர்-வங்கமனத்தூர், அதிகாரிபட்டியில் நடந்து செல்வதற்கு பாதை வசதி கோரி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த மக்கள் இந்த போராட்டத்தில் இறங்கினர். தகவலறிந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
News September 23, 2025
மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை முகாம் நாளை துவக்கம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கு அரசு வழங்கும் ரூ.1,000 பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆய்வு முகாம் செப். 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. விண்ணப்பித்தவர்கள் நாளை (செப். 24) காலை 10 மணி முதல் 12 மணி வரை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள 200-வது வார்டில் நடைபெறும் முகாமில் நேரில் பங்கேற்கலாம். இந்த முகாமில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
News September 23, 2025
திண்டுக்கல்: வங்கித் துறையில் வேலை ரூ.93,960 சம்பளத்துடன்!

திண்டுக்கல் மக்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 130 Credit Manager, பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <