News October 27, 2024
சாலை விபத்தில் மேலும் 2 விஜய் தொண்டர்கள் பலி

த.வெ.க. மாநாட்டுக்கு சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து சென்ற கார் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் கவிழ்ந்ததில், சீனிவாசன், கலை என்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, சென்னையில் விஜய் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.
Similar News
News January 31, 2026
விழுப்புரம்: 30 பேர் மீது அதிரடி வழக்கு!

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்யாததைக் கண்டித்து, விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக, போராட்டத்தில் ஈடுபட்ட 30விவசாயிகள் மீது அரகண்டநல்லூர் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News January 31, 2026
விழுப்புரம்: அடுத்தடுத்த அரங்கேறிய சம்பவங்கள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. ஜூஸ் கடை உரிமையாளர் சக்கரபாணி வீட்டில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 3.5 பவுன் நகை மற்றும் பணத்தைத் திருடினர். அதேபோல், தனியார் பள்ளி ஆசிரியை அபர்ணா வீட்டில் 2.5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரே நாளில் நடந்த இந்தத் துணிகரத் திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 31, 2026
விழுப்புரத்தில் பரிதாப பலி!

பாடிபள்ளம் பகுதியை சேர்ந்த ர.முருகன் (50). கூலித் தொழிலாளியான இவா், வீட்டுக்கு அருகிலுள்ள சிறிய பாலத்தின் மேல்பகுதியில் கடந்த 17-ஆம் தேதி இரவு படுத்திருந்தார். அப்போது திடீரென 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்தாா்.இதில் காயமடைந்த முருகனை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் விசாரனை நடத்தி வருகின்றனர்.


