News January 31, 2025

சாலை விபத்தில் அங்கன்வாடி ஊழியா் பலி 

image

திண்டிவனம் வட்டம், அகூர் புது காலனியை சேர்ந்த மாணிக்கம் மனைவி பூங்காவனம் (57) மேல்பேரடிகுப்பத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக வேலைப் பாா்த்து வந்தாா். இவா் சிறுநாங்கூா் ராயர் தெருவைச் சேர்ந்த பிரசாந்த்திடம் (23) உதவி கேட்டு, அவருடன் பைக்கில் தீவனூருக்கு சென்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பூங்காவனம் சம்ப இடத்திலே உயிரிழந்தார். ரெட்டணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 2, 2026

விழுப்புரம் மக்களே லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04146-259216) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

விழுப்புரம்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 2, 2026

விழுப்புரம்: விசிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!

image

வானூர் வட்டம் நெமிலி, பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அதிமுக, தவெக மற்றும் நா.த.க.வைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், நேற்று (மார்.01) வானூர் விசிக செயலாளர் பொன்னிவளவன் முன்னிலையில் அக்கட்சியில் இருந்து விலகி விசிகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் விசிகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து, உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. உடன் விசிக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!