News December 19, 2024
சாலை விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்ரேயா குப்தா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகளவில் நடைபெறும் நாடுகளில் தமிழகம் இரண்டாவது இடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 10, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
ஜலகனூரில் கிரிக்கெட் விளையாட்டில் பயங்கரம்

குரிசிலாப்பட்டு அடுத்த ஜலகனூர் பகுதியில் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில், ஏழுமலை என்ற வாலிபரை ஒரு கும்பல் தாக்கியது. இதனைத் தடுத்த அவரது தாயாரும் படுகாயமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் இன்று (மார்ச்-9) சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 9, 2026
திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <


