News June 16, 2024
சாலைவிபத்தில் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

சென்னையை சேர்ந்த ராஜேஷ் குமார், தினேஷ் ஆகியோர் கெங்கவல்லி, சமத்துவபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் தரனீஸ் என்பவருடன் கெங்கவல்லிக்கு பைக்கில் சென்று மீண்டும் திரும்பி வரும்போது கெங்கவல்லி நோக்கி சென்ற சரக்கு வேன் மோதியதில் ராஜேஷ் குமார் சம்பவ இடத்தில் பலியானார். மேலும், இருவர் பலத்த காயமடைந்து அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
ஆபாச நடனம்: சேலத்தில் வசமாக சிக்கிய பெண்கள்!

சேலம்: சேலதாம்பட்டி கோயில் விழாவில், ஆபாசமாக நடனமாடியதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக வினோத்குமார் என்பவர் அளித்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில், நடனக் குழுவைச் சேர்ந்த கார்த்தி, அஸ்வினி, நிகிதா, மற்றும் ஹேமா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 1, 2026
சேலம்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0427-2450023 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News March 1, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.


