News May 4, 2024
சாலையோரம் மூதாட்டியின் சடலம் மீட்பு

உசிலம்பட்டி அருகே வலையப்பட்டியில் சாலையோரம் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் கிடந்துள்ளது. இதைக் கண்ட கிராம மக்கள் இன்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த உசிலம்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு அவர் யார்? எவ்வாறு உயிரிழந்தார்? வெயிலின் தாக்கத்தின் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 13, 2025
மதுரையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி கொள்ளை

வாடிப்பட்டி பகுதியில் அடுத்தடுத்துள்ள 4 கோயில்களில் ஆடிப்பெருக்கு அன்று இரவு உண்டியலை உடைத்து திருடிய சமயநல்லுார் ரூபன்31, சேகர் 22, வடகாடுபட்டி தமிழழகன்22 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். 4 கிராம் தங்கம், ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டது. விக்கிரமங்கலம் பகுதியில் மதுஅருந்தும் இடத்தில் பழகி நண்பர்களான இவர்கள், விசேஷ நாட்களை நோட்டமிட்டு கூகுள் மேப்பில் கோவில்களை கண்டறிந்து திருடியது அம்பலமானது.
News September 13, 2025
ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்ற மூவர் மதுரையில் சரண்

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளருமான ம.க.ஸ்டாலினை வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 3 பேர் மதுரை மதுரை மாவட்ட 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். சரணடைந்த விஜய் 27, ஆகாஷ் 30, மகாலிங்கம் 26 ஆகிய 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
News September 13, 2025
மதுரை:ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️மதுரை மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!