News October 26, 2024
சாலையில் தூங்கிய தொழிலாளர் மீது லாரி ஏறி பலி

திருச்சியைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (48). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று நள்ளிரவு தொழிற்சாலையில் உள்ளே படுத்தபோது காற்று வரவில்லை என்பதால் வெளியே சாலையில் படுத்தார். அப்போது, ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று இவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் தொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
காஞ்சி மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News February 8, 2026
காஞ்சி: இளைஞர் துடிதுடித்து பலி

சுங்குவார்சத்திரம் அடுத்த செல்வழி மங்கலம் விநாயகர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அமர்ஜித் குமார். தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று செல்வழிமங்கலம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்ததில் நின்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அமர்ஜித் குமார் மீது பயங்கரமாக மோதி தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 7, 2026
காஞ்சிபுரம்: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

காஞ்சிபுரம் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


