News August 8, 2024
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.72 ஆயிரம் பறிமுதல்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவரிடம் இருந்து ரூ.1.500-ம், அலுவலகத்தில் ஓர் அறையில் இருந்த ரூ.71,230 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
Similar News
News August 11, 2025
சிவகங்கை மக்களே இத SAVE பண்ணிகோங்க.!

சிவகங்கை மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.
News August 11, 2025
காரைக்குடியில் செப்டம்பர் மாத உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காரைக்குடி மாநகராட்சியில் வரும் செப்டம்பர் மாதத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள் பின்வருமாறு. 09.09.25 – சங்கராபுரம் வார்டு 10,13,14,15 – பெரிச்சியம்மன் கோவில் அருகே சமுதாய கூடம். 16.09.25 & 17.09.25 – சங்கராபுரம் 9,11,12 – காந்தி நகர் சமுதாய கூடம். 23.09.25 – இலுப்பைக்குடி ஊராட்சி – லெட்சுமி நகர் சமுதாய கூடத்தில் நடைபெறுகிறது.
News August 11, 2025
BREAKING:சிவகங்கையில் பட்டப் பகலில் பள்ளி மாணவி கடத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, இன்று காலை பள்ளிக்கு சென்றபோது, காரில் வந்த 6 பேர் கடத்திச் சென்றனர். பேருந்து நிலையம் அருகே மாணவி சண்டையிட்டு, காரில் இருந்து குதித்து தப்பினார். காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முகமூடி அணிந்த கடத்தல்காரர்கள் தப்பியதால், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.