News July 27, 2024
சாம்பல்நிற அணில்கள் அருங்காட்சியகம்

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேகமலை புலிகள் காப்பகத்தில் செண்பகத்தோப்பில் பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் 1989 முதல் 480 சதுர கிலோ மீட்டரில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது. இதில் புலி, சிறுத்தை, கரடி உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் சாம்பல் நிற அணில்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக செண்பகத்தோப்பில் அருங்காட்சியகம் அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Similar News
News March 3, 2026
விருதுநகர்: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

விருதுநகர் மக்களே, <
News March 3, 2026
ராஜபாளையத்தில் மீண்டும் போட்டியிட திமுக MLA விருப்பம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு முன்னிலையில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார். உடன் திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
News March 3, 2026
சிவகாசி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை

சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (32). திருமணமான இவருக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். இவரது குடி பழக்கத்தால் சில தினங்களுக்கு முன் தகராறு எழுந்துள்ளது. இதனால் அவர் மனைவி, குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த மாரீஸ்வரன், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவர் விருதுநகர் G.H-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.


