News April 27, 2025

சாமிக்கு பரிகாரம்… நாடகமாடிய 5 பவுண் பரித்த இருவர் கைது

image

விழுப்புரம் முட்டத்தூரில் கடந்த 22-ம் தேதி குழந்தை வரம் வேண்டி சாமிக்கு பரிகாரம் செய்வதாக கூறி 5 பவுன் பறித்து சென்றுள்ளனர். விசாரணை நடத்திய போலீசார் வேலூரை சேர்ந்த வல்லரசு, வள்ளியம்மாளை கைது செய்தனர். விசாரணையில் வள்ளியம்மாள் முதல் நாள் தேன் விற்பது போல் வந்து வீட்டை நோட்டம் பார்த்துள்ளார். வீட்டில் குழந்தை இல்லாதவர்கள் பற்றி தகவலை மகன் வல்லரசுவிடம் கூறியது விசாரணையில் தெரியவந்தது.

Similar News

News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

கேட்ட வரம் தரும் அற்புத கோவில்

image

விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. சாலையில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருமண வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவித்தால் திருமணத்தடை நீங்கும். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க

News April 26, 2025

விழுப்புரத்தில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் நகரத்தில் அமைந்துள்ள VRP மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற மே.10ம் தேதி மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு கலந்துகொள்ள உள்ளனர். இந்த முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!