News September 28, 2024
சாத்தூர் வெடி விபத்தில் 25 வீடுகள் சேதம் – ஆட்சியர்

விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி பட்டாசு ஆலையில் இன்று நடைபெற்ற வெடி விபத்தில் 25 வீடுகள் சேதமடைந்துள்ளது. ட்ரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மற்றும் பிறவகை குடோன்களில் வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக சட்டவிரோதமாக பட்டாசுகள் மற்றும் பீடி பொருட்கள் பதுக்கி வைப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 24, 2025
விருதுநகரில் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்..!

விருதுநகர்: சமூக பாதுகாப்புத் திட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, அமைப்புசாரா டிரைவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் திருநங்கைகள் சொந்தமாக ஆட்டோ வாங்க நலவாரியத்தின் மூலம் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே க்ளிக் செய்து விண்ணப்பித்து சொந்தமாக புதிய ஆட்டோவை உடனே வாங்குங்கள்.. உங்க whatsapp குரூப்ல #SHARE பண்ணுங்க.
News August 23, 2025
விருதுநகரில் ரூ.5.62 லட்சம் மதிப்புள்ள கந்தகம் பறிமுதல்

பட்டம்புதூர் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதில் தடையில்லா சான்று பெறாமல் 16 டன் கந்தகம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து லாரி ஓட்டுனரிடம் விசாரித்த போது அப்பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. ரூ.5.62 லட்சம் மதிப்புடைய கந்தகத்தை தடையில்லா சான்று பெறாமல் கொண்டு வந்த லாரி ஓட்டுனர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
News August 23, 2025
விருதுநகர் தவெக நிர்வாகி மறைவுக்கு விஜய் இரங்கல்

தவெக தலைவர் விஜய் இரங்கல் குறித்து அறிக்கை ஒன்றினை வெளிட்டுள்ளார். அதில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து K.காளிராஜ் உட்பட மூவர் மதுரை மாநாட்டில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் கழகத்திற்காக செய்த பணி என்றும் நினைவில் நிலைக்கும். குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபம். அவர்களது குடும்பங்களுக்கு கழகம் என்றும் துணையாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.