News September 13, 2024
சாத்தூர்: கல்லூரியில் களைகட்டிய ஓணம்

சாத்தூர் அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஓணம் கொண்டாட்டத்திற்காக மாணவ, மாணவிகள் கேரள பாரம்பரிய உடையில் கல்லூரிக்கு வருகை தந்திருந்தனர். மேலும் சிறப்பாக அத்தப்பூ கோலமிட்டிருந்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கல்லூரி சேர்மன் ராஜூ கலந்து கொண்டார். செயலாளர் முத்துக்குமார், கல்லூரி முதல்வர் உஷாதேவி தலைமை வகித்தனர்.
Similar News
News October 20, 2025
விருதுநகரில் 61 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்

விருதுநகரில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம், சிஐடியு ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் இணைந்து தொடர்ந்து 61 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சருடன் சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 61 நாட்கள் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
News October 19, 2025
விருதுநகருக்கு தீபாவளியன்று கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென், மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும்(அக்.19, 20) விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட முடியுமா என அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது.
News October 19, 2025
விருதுநகர்: ஊராட்சி செயலர் பணி., தேர்வு இல்லை

விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!