News August 11, 2025
சாத்தூரில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தில் 2 நாட்களுக்கு முன் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக விஜயகரிசல்குளம், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை வெற்றிலையூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் வீடு வீடாக நடத்திய அதிரடி சோதனையில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
திருத்தங்கல் அரசு பள்ளியில் மோதல்

சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி மாணவர்கள் இருவர் வகுப்பறையில் வைத்து தாக்கிக்கொண்ட சம்பவம் சகமானவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இரு மாணவர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பிய வைத்தனர். இதே பள்ளியில் கடந்த மாதம் போதையில் மாணவர்கள் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
News August 11, 2025
காரியாபட்டியில் அமைச்சரின் அறிவிப்பு என்னாச்சு

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் தினமும் சிகிச்சைக்காக சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது மகப்பேறு மருத்துவர் இங்கு உடனடியாக நியமிக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை மருத்துவர் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
News August 11, 2025
மானிய விலையில் காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு

விருதுநகர் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு 100% மானியத்தில் ரூ.60 வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடித் தொகுப்பு 100% மானியத்தில் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.