News April 15, 2025
சாதனை படைத்த மாணவிக்கு கேடயம் வழங்கிய ஆட்சியர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி -1 (TNPSC GROUP-1) தேர்வில் வெற்றிபெற்ற செல்வி கதிர்ச்செல்வி அவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (15.04.2025) கேடயம் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன் உள்ளார்.
Similar News
News April 17, 2025
கடலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள (Marketing Executive) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் <
News April 17, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குண்டாஸில் கைது

மங்கலம்பேட்டையில் டியூஷன் சென்டர் நடத்தி வருபவர் வெங்கடேசன் (42). இவர் தனது டியூஷனில் படிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து விருத்தாச்சலம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த நிலையில் எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரைப்படி ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் உத்தரவுபடி நேற்று வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News April 17, 2025
பண்ருட்டி: ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

பண்ருட்டி திருவதிகையில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற விரைவு ரயில் ஒன்று அந்த முதியவர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். இது குறித்து கடலூர் இருப்பு பாதை ரயில்வே போலீசார், இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.