News December 16, 2025

சாக்கடையில் மூழ்கி பலியான மூதாட்டி

image

மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் இந்திராவதி(75) கணவனை இழந்த இவர் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு வீட்டில் தனித்து வசித்து வந்தார். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கிருதுமால் நதி சாக்கடைக்குள் மூழ்கி இறந்த கிடந்துள்ளார். உடலை கைப்பற்றி திடீர் நகர் போலீசார் இவர் எப்படி சாக்கடைக்குள் விழுந்து இறந்தார் ? என்பது குறித்து இன்று விசாரிக்கின்றனர்.

Similar News

News December 18, 2025

தீ விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் ஆய்வு

image

மதுரை மேலவெளி வீதியில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில், தீ விபத்து நடந்த கட்டிடத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு விபத்து குறித்து கேட்டறிந்தார் கலெக்டர் பிரவீன் குமார் உடன் இருந்தார்.

News December 18, 2025

திருப்பரங்குன்றத்தில் அடுத்த சர்ச்சை: புதிய புகார் மனு

image

திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் காவல் நிலையத்தில், சந்தனக்கூடு மற்றும் கல்லத்தி மரம் தொடர்பாக புகார் மனு ஒன்றை இன்று அளித்தனர். அதில் இன்னும் 2 நாளில் மலை மீது உள்ள தர்கா சார்பாக சந்தனக்கூடு நடைபெற உள்ளது. தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மலை மீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என புகார் அளிக்கப்பட்டது.

News December 18, 2025

மதுரை TaTa COATS நிறுவனத்தில் வேலை ரெடி.!

image

மதுரையில் உள்ள TaTa COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D & SolidWorks பணியிடத்திற்கு 5 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆண், பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். ஐடிஐ, டிப்ளமோ முதல் ஏதேனும் ஒர் டிகிரி படித்தவர்கள் ஜனவரி மாதம் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அரிய 89258-97701 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!