News May 30, 2024

சாகச விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

இந்திய அரசு நீர், நிலம், ஆகாயத்தில், சாகச விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே’ விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் இதற்கான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மே 31ஆம் தேதிக்குள் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News July 7, 2025

திருவள்ளூரில் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை9ம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும், திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை உள்ளிட்ட 10 துறைகள் தொடர்பான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகள், செயல்படுத்தப்பட்டத் திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் காந்திராஜன் தலைமையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) முற்பகல் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News July 7, 2025

சென்னை விமான நிலையத்தில் +2 முடித்தால் போதும் வேலை ரெடி

image

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் நிறுவனத்தில் உதவியாளர், பாதுகாப்பு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 393 பணியிடங்கள் உள்ளன. +2, டிகிரி படித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ரூ.21,500 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!