News December 14, 2025
சளியை கரைக்கும் சிம்பிள் கஷாயம்

சளி வாட்டும்போது அதில் இருந்து வெளியேற, மாத்திரைகளை தேடிச் செல்வதே பலரின் வழக்கம். ஆனால் சிம்பிளான கஷாயம் மூலம் சளியை கரைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 கிளாஸ் தண்ணீரில், கிராம்பு -3, மிளகு -3, சுக்குப் பொடி – கால் ஸ்பூன், மஞ்சள் பொடி – 2 சிட்டிகை, பிளாக் சால்ட் – 2 சிட்டிகை, நா.சர்க்கரை – 1 ஸ்பூன் ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடுங்கள். அதை 1 டம்ளராக சுண்ட வைத்தால் கஷாயம் ரெடி.
Similar News
News April 13, 2026
USA-வுக்கு பெரிய பாடம் கற்பிப்போம்: ஈரான்

USA உடனான பேச்சுவார்த்தையில் ஈரான் மிக சிறந்த முயற்சிகளை மேற்கொண்டதாக சபாநாயகர் முகமது கலிபாஃப் கூறியுள்ளார். இது பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததாக கூறிய அவர், ஆனால் USA தர்க்கரீதியாக பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தால் நாங்களும் ஒத்துழைப்போம் இல்லை சண்டைதான் வழி என்றால் அதற்கும் தயார் என்றார். மேலும், தங்களின் மன உறுதியை சோதித்தால் பெரிய பாடம் கற்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
News April 13, 2026
மக்கள் செய்த தவறால் 15 ஆண்டுகளாக கத்துறேன்: சீமான்

ஓட்டுக்கு காசு கொடுக்கும்போது, ஜனநாயகம் செத்து பணநாயகம் வெல்வதாக ஆண்டிப்பட்டி பிரசாரத்தில் சீமான் கூறியுள்ளார். தேர்தலில் முதலீடு செய்பவர்கள், பல மடங்கு லாபத்தை எடுக்கத்தான் நினைப்பார்கள் என்ற அவர், எத்தனை காலத்திற்கு திமுகவுக்கும் அதிமுகவுக்கு ஓட்டு போடுவீர்கள் என கேட்டார். மேலும், மக்கள் செய்த தவறால் 15 ஆண்டுகளாக கத்திக் கொண்டிருப்பதாகவும், மீண்டும் அந்த தவறை செய்யாதீர் என்றும் பேசினார்.
News April 13, 2026
சங்கீதா முடிவில் மாற்றம்.. விஜய் தரப்பு மகிழ்ச்சி!

ஏப்.20-ம் தேதி சங்கீதா செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, வரும் 20-ம் தேதி அன்று விவகாரத்து வழக்கு விசாரணைக்கு சங்கீதா, விஜய்க்கு எதிராக ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் தரப்பு சங்கீதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் மனம் மாறிய அவர், செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


