News March 30, 2024

சலூன் கடைக்காரர் குத்திக் கொலை

image

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் ஆண்டியப்பன். இவருக்கு மகேஷ் என்பவரின் மனைவியுடன் தொடர்பு இருந்ததால் மகேஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மகேஷின் அண்ணன் குமாரசாமி நேற்று இரவு ஆண்டியப்பனை கத்தியால் குத்தியுள்ளார் .இதில் காயமடைந்த ஆண்டியப்பன் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தாா். 

Similar News

News August 14, 2025

தூத்துக்குடி: மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் வேலைவாய்ப்பு

image

மாவட்ட நலவாழ்வு சங்கம், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் (MLHP) தொகுப்பூதிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத ஊதியம் ரூ.18,000. விண்ணப்பங்களை <>டவுன்லோடு<<>> செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி-628002 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News August 14, 2025

தூத்துக்குடி: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை 0461-2325606 அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.

News August 14, 2025

தூத்துக்குடி: ரூபாய் 1 லட்சம் வேணுமா..?

image

தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழாவையொட்டி, ஆக 14 முதல் 21 வரை புகைப்படப் போட்டி நடைபெறும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார். மாவட்ட கலாச்சாரம், பாரம்பரியம், இயற்கை, தொழிலாளர் வாழ்க்கை தலைப்புகளில் 5 சொந்தப் படங்களை, AI, கிராபிக்ஸ் இல்லாமல், 5 MB-க்குள் thoothukudi.nic.in தளத்தில் பதிவேற்றலாம். முதல் பரிசு ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.50,000, 10 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.5,000 வழங்கப்படும்.

error: Content is protected !!