News February 16, 2025

சலுகை வழங்க உறவினர்களிடம் ‘ஜிபே’ வசூல்; காவலர் சஸ்பெண்ட்

image

மதுரை சிறையில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்க அவர்களின் உறவினர்கள் மூலம் சிலரது ‘ஜிபே’ மூலம் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை சிறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட சிறைகளிலும் சில காவலர்களும் வசூலில் ஈடுபட்டுள்ளனர். தேனி காவலர் ஒருவர் கைதிக்கு அலைபேசி கொடுத்து உறவினர்களிடம் பேச உதவியதற்கு ‘ஜிபே’ மூலம் ரூ.5ஆயிரம் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

Similar News

News November 9, 2025

தோப்பூரில் ஆய்வில் ஈடுபட்ட எம்.பி.க்கள்

image

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி தருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இன்று வரை அந்த மருத்துவமனைக்கான பணிகள் ஆரம்பிக்கவில்லை. இதனால், எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் எம்.பி வெங்கடேசன் இணைந்து இன்று அந்த இடத்திற்கு சென்று கருத்து தெரிவித்துள்ளனர். “மதுரை எய்ம்ஸ் 95% முடிந்தது என கூறப்படுகிறது, ஆனால் நாங்கள் தோப்பூர் தளத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் காணவில்லை” என பதிவிட்டுள்ளனர்.

News November 9, 2025

மதுரை: EB பில் அதிகம் வருதா??

image

மதுரை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE!

News November 9, 2025

மதுரை பெண்களை இந்த நம்பர் -ஐ SAVE பண்ணுங்க

image

மதுரை: குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பெற 181 என்ற பெண்கள் உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என மதுரை மாநகர் காவல்துறை அறிவித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக இந்த உதவி எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது. அவசரநேரங்களில் 83000-21100 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு உதவி பெறலாம். SHARE!

error: Content is protected !!