News November 29, 2025
சற்றுமுன் விபத்து: ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

ஆந்திராவின் கர்னூல் அருகே நிகழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கர்நாடகாவின் கோலார் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் மந்த்ராலயம் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கி உயிரற்று கிடந்த குழந்தைகளின் உடல்களை போலீசார் கனத்த இதயத்தோடு கையில் ஏந்தினர். சாலையில் மிகவும் கவனம் தேவை மக்களே!
Similar News
News December 3, 2025
கூட்டணிக்கு Plan B-ஐ கையில் வைத்திருக்கிறதா காங்கிரஸ்?

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது காங்கிரஸ். இதனால் ஆளும் தரப்பும் ஆசுவாசமானது. ஆனால், திமுகவுக்கு தெரியாமல் தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி சீக்ரெட்டாக காங்., ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அறிவிக்கப்படாத அணி ஒன்று தீவிரமாக இயங்கி வருகிறதாம். கேட்கும் சீட்டை கொடுக்கவில்லை எனில் மீண்டும் கூட்டணியில் குழப்பம் வெடிக்கலாம் என பேசப்படுகிறது.
News December 3, 2025
கூட்டணிக்கு Plan B-ஐ கையில் வைத்திருக்கிறதா காங்கிரஸ்?

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது காங்கிரஸ். இதனால் ஆளும் தரப்பும் ஆசுவாசமானது. ஆனால், திமுகவுக்கு தெரியாமல் தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி சீக்ரெட்டாக காங்., ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அறிவிக்கப்படாத அணி ஒன்று தீவிரமாக இயங்கி வருகிறதாம். கேட்கும் சீட்டை கொடுக்கவில்லை எனில் மீண்டும் கூட்டணியில் குழப்பம் வெடிக்கலாம் என பேசப்படுகிறது.
News December 3, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹240 குறைந்திருந்த நிலையில், இன்று(டிச.3) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹12,060-க்கும், சவரன் ₹96,480-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 20.79 டாலர்கள் குறைந்து 4,220 டாலர்களாக விற்பனையாகிறது. ஆனாலும், இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


