News December 4, 2025

சற்றுமுன்: விடுமுறை இல்லை.. அறிவித்தார் கலெக்டர்

image

இரவில் இருந்து விட்டுவிட்டு மழைபெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதேநேரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 4, 2025

மக்களை திருத்தவே முடியாது: தமிழருவி மணியன்

image

இனி காமராஜர் மக்கள் கட்சியை நடத்துவதில் பயனில்லை என தமிழருவி மணியன் பேசியுள்ளார். எந்த கைமாறும் இல்லாமல் 16 ஆண்டுகள் கட்சி நடத்தியதாக கூறிய அவர், மக்களிடம் மாற்றம் வராததால் கட்சியை கலைத்து, தன்னுடன் இருந்தவர்களை தமாகாவில் சேர்த்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், பணம் எதுவும் வாங்காமல் ஓட்டு போடும் நிலையில் இப்போது மக்கள் இல்லை எனவும் இது திருத்தவே முடியாத சமூகம் என்றும் அவர் கொந்தளித்துள்ளார்.

News December 4, 2025

BREAKING: 12 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு.. வந்தது Alert

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், கோவை, ஈரோடு, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். எனவே, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்.

News December 4, 2025

அதான் பாலைய்யா❤️!

image

பாலைய்யா என்றாலே பந்தா பண்ணக்கூடியவர் என்றுதானே அறிவோம், இதை கேளுங்க. சென்னையில் ‘அகண்டா 2’ பட பிரஸ்மீட்டுக்கு பத்திரிக்கையாளர்கள் சொன்ன நேரத்தில் வந்த நிலையில், பாலைய்யாவின் விமானம் 4 மணி நேரம் லேட். பத்திரிக்கையாளர்கள் காத்திருக்கும் விஷயமறிந்த அவர், சாப்பாடு தயாராக இருந்தாலும், சாப்பிடாமலே நேராக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வந்துள்ளார். பிறருக்கு மரியாதை கொடுக்கும் குணம்.. அதான் பாலைய்யா!

error: Content is protected !!