News January 13, 2026
சற்றுமுன்: இரவில் விஜய்க்கு அதிர்ச்சி

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக நேற்று (ஜன.12) டெல்லி CBI அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அப்போதும் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் CBI அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜன.19-ல் மீண்டும் ஆஜராக விஜய்க்கு CBI சம்மன் அனுப்பியுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பிறகு விஜய் ஆஜராகவுள்ளதால். அதற்கு முன்பு தனது தரப்பு வழக்கறிஞர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளாராம்.
Similar News
News January 27, 2026
‘ஜன நாயகன்’ சிக்கலுக்கு இதுவே காரணம்

<<18971849>>ஜன நாயகன் பிரச்னையில் <<>> CBFC தலைவருக்கு, சென்சார் குழு உறுப்பினர் ஒருவர் அனுப்பிய புகாரின் விவரம் வெளியாகியுள்ளது. படத்தில் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்டும் காட்சிகள் உள்ளதாகவும், ராணுவம் குறித்த காட்சிகளை சரிபார்க்க தங்களது குழுவில் பாதுகாப்பு வல்லுநர் இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளார். தனது ஆட்சேபனை ஏற்கப்படாததால், இதில் CBFC தலைவர் தலையிடுமாறு கோரியுள்ளார்.
News January 27, 2026
கூட்டணிக்கு TTV என்னை அழைக்கவில்லை: OPS

OPS நிச்சயம் தங்கள் கூட்டணிக்கு வருவார் என<<18973340>> TTV தினகரன் <<>>தெரிவித்திருந்தார். ஆனால் TTV உட்பட யாரும் தன்னை கூட்டணிக்கு அழைக்கவில்லை என OPS கூறியுள்ளார். அதேசமயம் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தன்னுடைய ஒன்றை கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, எல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 27, 2026
NDA கூட்டணியில் இணையும் புதிய கட்சி?

அடுத்த வாரத்திற்குள் NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என நயினார் கூறியிருந்தார். இந்நிலையில், நயினாரை தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு திரு.வி.க. நகர் தொகுதி ஒதுக்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.


