News November 14, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

அதிமுக, ஓபிஎஸ், டிடிவி கட்சியினர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், ஒசூர் மாநகர கிழக்கு மண்டல குழு தலைவர் S.புருசோத்தமரெட்டி உள்ளிட்டோர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை இவர்களின் ஆதரவாளர்கள் 2,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 14, 2025
பிஹார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பமே அபாரம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஜேடியூ- பாஜக கூட்டணி 15 இடங்களிலும், ஆர்ஜேடி – காங்., கூட்டணி 10 இடங்களிலும், ஜன் சுராஜ் 2 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.
News November 14, 2025
By Election Results: வாக்கு எண்ணும் பணி தொடங்கியது!

தெலங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்கள் & ஜம்மு காஷ்மீரில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளன. ஜூபிளி ஹில்ஸ் (தெலங்கானா), தரன் தரன் (பஞ்சாப்), கட்ஸிலா (ஜார்க்கண்ட்), அன்டா (ராஜஸ்தான்), டம்பா (மிசோரம்), நுவாபடா (ஒடிசா), புட்கம், நக்ரோட்டா (ஜம்மு காஷ்மீர்) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவ.11-ல் நடைபெற்றது.
News November 14, 2025
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியுள்ளது. பிஹார் சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 67.13% வாக்குகள் பதிவாகியிருந்தன. குறிப்பாக, ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்குகள் செலுத்தியுள்ளனர். மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 2,616 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


