News April 7, 2026
சர்தார் வல்லபாய் படேல் பொன்மொழிகள்

*நாம் உயர்ந்தவர் தாழ்ந்தவர், செல்வந்தர் ஏழை, சாதி, மதம் ஆகிய வேறுபாடுகளை அகற்ற வேண்டும். *சாதி, மத வேறுபாடுகள் நம்மைத் தடுக்கக் கூடாது. அனைவரும் இந்தியாவின் குழந்தைகள் ஆவர். *சத்தியாகிரகம் என்பது பலவீனமானவர்களுக்கோ அல்லது கோழைகளுக்கோ உரிய கொள்கை அல்ல. *ஒருவர் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் அந்த புரட்சி சமூகத்திற்கு அதிர்ச்சியை அளிக்கக் கூடாது. புரட்சியில் வன்முறைக்கு இடமில்லை.
Similar News
News April 11, 2026
இந்தியாவுக்கு கிடைத்த 4 தங்கமகள்கள்

மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 5 தங்கப் பதக்கங்களை இந்தியா தன்வசப்படுத்தியுள்ளது. மீனாட்சி (48 kg), பிரீத்தி (54 kg), பிரியா (60 kg) & அருந்ததி (70 kg) ஆகிய 4 வீராங்கனைகள் தங்கப் பதக்கங்களை கைப்பற்றினர். 50 kg ஆடவர் பிரிவில் விஷ்வாந்த் சுரேஷ், ஜப்பானின் டைச்சி இவாயியை 5:0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார். பதக்கப்பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.
News April 11, 2026
கூட்டணியில் மரியாதை இல்லை: மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர், மீண்டும் தன் பேச்சால் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். மதுரையில் காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், கூட்டணிக்கு நம்மை அழைக்கவில்லை; மரியாதையும் இல்லை, நிர்வாகிகள் அனைவரும் கனத்த இதயத்துடன் உள்ளனர் என்றார். இருப்பினும், ஏப்.23 வரை இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, வெற்றிக்காக பாடுபடுங்கள் என்றும் கட்சியினரை அறிவுறுத்தியுள்ளார்.
News April 11, 2026
நண்பருக்கு ஆதரவாக நிற்கும் சூர்யா

ரிலீஸுக்கு முன்பே ஜன நாயகன் படம் லீக்கானது நெஞ்சை உலுக்கும் அநீதி என சூர்யா கூறியுள்ளார். இதுதொடர்பான X பதிவில், ஒரு குழுவின் உழைப்பும், ஆர்வமும் சிதைக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தார். தயவுசெய்து இப்படத்தை இணையத்தில் பகிரவோ, விவாதிக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொண்ட சூர்யா, இது மன்னிக்க முடியாதது என கடிந்துகொண்டார். மேலும், தனது நண்பர்களுக்கு ஆதரவாக நிற்பதாகவும் கூறியுள்ளார்.


